VANAKKAM Silanthinaayagam WELCOMES u !!!

Monday, October 25, 2010

சிந்திக்கச் சில...


வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள். 

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.

தன்னுடைய வாழ்நாளில் எவராவது தாம் ஒரு பிழையும் செய்ததில்லை என்று அவர்கள் நினைத்தால் தம் முயற்சிகளை புதிய வாழ்வில் செய்து பார்த்ததில்லை என்று பொருள்.

ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை வாக்கு சுற்றம் இதயம் இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள். ஏனெனில் அவைகளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும் பெரும் வலியை ஏற்படுத்தும்.

நன்மையைப் போலவே தீமையிலிருந்தும் மனிதன் பெரும் பாடங்களைக் கற்றுக்கொள்கிறான்.

No comments:

Post a Comment