VANAKKAM Silanthinaayagam WELCOMES u !!!

Wednesday, February 15, 2012

வெற்றிக்கு முதல் படி



வெற்றிக்கு முதல் படி 

jd; ifNa jdf;F cjtp mJNghy; ek; jd;dk;gpf;ifNa vg;NghJk; ntw;wpia mila Kjy;gb. vk;kpy; gyu; gy topfspy; jd;dk;gpf;ifia ,of;f Neupl;lhYk; fPo;fz;l jd;dk;gpf;ifia tsu;j;Jf;nfhs;Sk; vspa Kiwfis gpd;gw;wpdhy; ehk; ekJ ,yl;rpaj;ij ,yFtpy; mile;Jtpl KbAk;.

nghrpbt; vz;zk;
vg;nghOJk; ey;y tp\aq;fisAk;> jd;dk;gpf;if Cl;Lk; Ngr;Rf;fisAk; mbf;fb Nfl;fTk;. cq;fsJ yl;rpak; kw;Wk; vjpu;fhyj;ijg; gw;wp fz;zhb Kd; epd;W jpdKk; rg;jkhf Ngrp goFq;fs;. my;yJ vt;tg;NghJ jd;dk;gpf;ifia J}z;lNtz;LNkh mg;NghJ ,t;thW gyKiw nrhy;ypg; ghu;f;fTk;.

kdjpy; gl;lij ijupakhf NgRq;fs;
rpyu;> gyu; $b ,Uf;Fk; NghJ NgrNt jaq;Ftu;. kw;wtu;fs; ek;ik Kl;lhs; vd epidj;J tpLthu;fNsh vd;w gak;jhd;. ,dp gak; ,d;wp cq;fs; kdjpy; gl;lij ijupakhf vLj;Jg; NgrTk;. ,jdhy; ekJ vz;zj;jpy; xU ek;gpf;if gpwf;Fk;. kw;wtu;fSk; cq;fis jiytuhf Vw;Wf; nfhs;tu;.vdNt ek;ik gw;wpNa vg;NghJk; rpe;jpf;fhky; ek;ikr; Rw;wp cs;stu;fisg; gw;wpAk;> rKjhaj;ijg; gw;wpAk; rpe;jpj;J ek;ik tsg;gLj;jpf; nfhs;s Ntz;Lk;.vy;Nyhuplj;jpYk; ijupakhf Ngr Muk;gpj;jhNy jd;dk;gpf;if cq;fis Njb tUk;.

ey;y tp\aq;fis kPl;bg; ghUq;fs;
cq;fsJ tho;f;ifapy; vt;tsNth ey;ytp\aq;fs; ele;jpUf;Fk; mjw;F ntw;wpAk; fpilj;jpUf;Fk;. mtw;iw gl;bay; ,Lq;fs;. mJ cq;fsJ gbg;ghfl;Lk;> cq;fsJ jpwikahfl;Lk; my;yJ ey;y cwthfl;Lk;.mt;thW gl;bay; ,Lk;NghJ jhd; vj;jid tpjkhd ey;y tha;g;Gfs; kw;Wk; jd;dk;gpf;if Cl;lf;$ba tp\aq;fs; ek; tho;tpy; ele;Js;sJ vd;gJ njupAk;.

kdjhu ghuhl;Lq;fs;
Kjypy; kw;wtu;fis kdjhu ghuhl;lf; fw;Wf; nfhs;Sq;fs;. rpd;d tp\akhf ,Ue;jhYk;> ghuhl;Lq;fs;> kw;wtu;fisg; gw;wp Fiw $Wtij tpLq;fs;. ,g;gb ele;J nfhz;lhy; cq;fis kw;wtu;fSf;Fk; gpbj;Jg; NghFk;. ,jdhy; ekf;F jd;dk;gpf;if mjpfupf;Fk;.ghlrhiy >fy;Y}up>nghJ tpoh kw;Wk; $l;lq;fspy; mkUk; NghJ> vg;NghJk; gpd; ,Uf;ifapy; cl;fhuhjPu;fs;.,J jd;dk;gpf;if FiwghlhFk;. vdNt ,dpNky; vq;F nrd;whYk;> Kd; ,Uf;ifapy; ijupakhf cl;fhUq;fs;.

epkpu;e;j epiy
vg;NghJNk epkpu;e;j epiyapy; epw;fNth> mkuNth gofpf;nfhs;s Ntz;Lk;. Njhs;fis njhq;fpa gbNa te;jhy; mtuhy; jd;dk;gpf;ifNahL vijAk; nra;aKbahJ vd ghu;g;gtu; vz;zptpLtu;. epkpu;e;J epw;gJ> jiyia njhq;fg;Nghlhky; ,Ug;gJ> vjpNu cs;stu;fspd; fz;fis NeNu ghu;j;J NgRtJ Nghd;wit vkf;F jd;dk;gpf;if cs;sJ vd;gJ nrhy;yhky; nrhy;Yk; FzkhFk;.

Mil
ehk; mzpAk; Mil $l vkJ jd;ek;gpf;ifia mjpfupf;f nra;fpwJ. etPd fhyj;jpw;F Vw;wtifapy; cq;fsJ Milfis mzpAk; NghJ ePq;fs; epidg;gJ elf;Fk;. jd;dk;gpf;ifia Cf;fg;gLj;Jk; Fzk; ehk; mzpAk; MilfSf;F cz;L vd;gijAk; kWg;gjw;fpy;iy.

Sunday, January 29, 2012

"கால் சிலம்பை கழட்ட வேண்டியதில்லை."

நதி போல் விளையாட்டாய் வளைந்து நெளிந்து போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென வந்த ஒரு திருப்பத்தில் உணர்ந்தேன் வளைவும் நெளிவும் கடைசியாக முடிந்த வடிவம் கேள்விக்குறி என்பதை மட்டும்..
பட்டுப்புழுவின் மரணம் பட்டாம்பூச்சி போல..

வாழ்க்கை ஒரு பட்டாம்பூச்சி மாதிரி.கொஞ்ச காலம் தான் வாழ முடியும். அதே மாதிரி ஒரு  பட்டாம்பூச்சி சுதந்திரமா பறக்கும்வரை தான் தன் சந்தோஷ காற்றை சுவாசிக்கலாம் என்பதையும் தெரிஞ்சுகொள்ள  வேண்டும் .

சுய கௌரவம் ,அதிகாரம்,பதவி,பொய், போட்டி,பொறாமை இப்படி பல உயிரற்ற விஷயங்களுக்காக உயிருள்ள நம் சக மனிதர்களை பாடாய்படுத்துகிறோம். கொலை செய்றது மட்டும் தப்பு  இல்ல. நம்ம சுயநலத்திற்காக, நம்ம சந்தோசத்துக்காக இன்னொருத்தரை பற்றி  தப்பா சொல்றது தப்புதானே? சக ஊழியர்களை,சக நண்பர்களை,உறவினர்களை பற்றி  அவர்கள்  இல்லாதபோது தப்பா பேசுறதும் ,நம்பிக்கை துரோகம் பண்றதும் கூட கெட்டது தானே?

"கால் சிலம்பை  கழட்ட வேண்டியதில்லை எந்த நீதிக்காகவும்...."

கதை :
ஒரு சாதுவை சோதிக்க நினைத்த ஒரு மனிதன் பட்டாம்பூச்சியை கையில் வைத்து கொண்டு அவரிடம் ,என் கையில் என்ன உள்ளது என்று கேட்டான் .. அதற்கு அவர் சரியாக பட்டாம்பூச்சி என்று சொல்லிவிட்டார்.

உடனே  அவன் சாதுர்யமாக பட்டாம்பூச்சி எப்படி இருக்கிறது? என்று கேட்டான்.ஒரு வேளை அவர் உயிரோடு உள்ளது  என்று சொன்னால் அதனை  நசுக்கி இறந்து விட்டது என்று சொல்லலாம் என்றும்
இதுவே இறந்து விட்டது என்று சொன்னால் பறக்க விடலாம் என்றும் எண்ணினான் ..
அதற்கு அந்த சாதுவோ "அது உன் கையில் இருக்கிறது" என்று சொன்னார்
அது போல தான் நம் வாழ்க்கையும் .....அது பறப்பதும் இறப்பதும் நம் கையில் தான்  உள்ளது .

Thursday, January 12, 2012

சங்கடங்களை தீர்க்கும் "சங்கடஹர சதுர்த்தி"

விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடியதுமான சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தையும்   சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை கடைப்பிடிக்கத் துவங்க வேண்டும்.

"ஹர" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும்.

செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை "மகா சங்கடஹர சதுர்த்தி" என்று அழைக்கின்றனர்.

ஒவ்வொரு மாதமும் வரும் "சங்கடஹர சதுர்த்தி" நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். கடன்தொல்லை, நோய், பகை உடையவர்கள் இந்த நோன்பை பூண்டு அவை நீங்கப் பெற்று இன்பம் எய்தி வருகின்றனர். 

விரதத்தின் பலன்கள்:

இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரு‌ம்பகு‌தி குறையும்.

விரதம் இருப்பது எப்படி?

சங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன்  நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும்.

மாலை ஆலயத்திற்கு சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்ள வேண்டும்.

அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.

விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்ற வேண்டும். சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகருக்குரிய,
 கணேச காயத்ரீ மந்திரத்தையும், தமிழில் விநாயகர் அகவலையும் பாடி  கணபதியை தியானித்தால் கூடுதல் பலன் உண்டு.

கணேச காயத்ரீ

"ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி : ப்ரசோதயாத்"

விநாயகர் அகவல்   (எழுதியவர்: ஔவையார்)

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)                     

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்                                   
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே                                
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)

முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)           

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட                                   
வித்தக விநாயக விரைகழல் சரணே! (72) 

பலன் பெற்றவர்கள்: 

சந்திரன் இந்நோன்பைப் பூண்டு  சயரோகம் நீங்கப்பெற்றான்.
இவ்விரதத்தை பார்வதிதேவி கடைப்பிடித்து பரமனை அடைந்தார் எனவும், 

பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் செய்தபோது ஸ்ரீ கிருஷ்ணபகவானின் ஆலோசனைப்படி இவ்விரதத்தை கடைப்பிடித்து  போரில் தர்மத்தை நிலைநாட்டினர் என்பதும்,

சிவபெருமானும் இவ்விரதத்தை கடைப்பிடித்தே திரிபுரத்தினை எரித்தார் எனவும்,
இந்திரன் மூவுலகையும் ஆளும் வரம் பெற்றான் எனவும், ஆஞ்சநேயர்  இவ்விரதத்தை கடைப்பிடித்த பின்னரே இலங்கைக்கு சென்று சீதை இருக்குமிடத்தை அறிந்து வந்து இராமபிரானிடம் தெரிவித்துள்ளார் என்பதும் ஐதீகம்.
அத்தோடு   உண்மையே பேசிய அரிச்சந்திரனும் இவ்விரதத்தைக் கடைப்பிடித்தே அழியாப் புகழ் பெற்றான் என்பர்.

இவ்விரதத்தை முதன் முதலிற் செவ்வாய் அநுட்டித்து பேறுபெற்றான். அதனால் இதனை அங்காரக சதுர்த்தி எனவும் அழைப்பர்.



நன்றி: விக்கிப்பீடியா , வெப்துனியா.

Back to top Go down

Tuesday, January 10, 2012

"கார்த்திகை எண்ணையும் கணுப்பிடியும் உடன்பிறந்தானுக்கு"

கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை  என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள்  இடம்பெறும் விழா ஆகும். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன இன்றைய நாளில் அடங்கும்.

இந்த  கணுப்பண்டிகை  பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும்.பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள் கொத்தினை கட்டுவார்கள் அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.

"கணுப்பிடி " இந்த நாளின் சிறப்பு..அதென்ன கணுப்பிடி என்கிறீர்களா ?

ஆமாம்.. அது ஒருவகை விரதம் .
உடன்பிறந்த சகோதரர்களுக்காய் பெண்கள் செய்யும் நோன்பு.
உடன்பிறந்த சகோதரர்கள் நலமுடனும் வளமுடனும்  வாழ சகோதரிகள் இன்றைய நாளில் பிரார்த்திப்பார்.

"கார்த்திகை எண்ணையும் கணுப்பிடியும் உடன்பிறந்தானுக்கு" என்பது பழமொழி.

அதாவது கார்த்திகை மாதம் எண்ணைதேய்த்துக் குளித்து விளக்குவைப்பதும், பொங்கலன்று  பொங்கிய பால் சாதத்தை உடன்பிறந்தவர்களின் நலத்திற்காக காணும்பொங்கல்தினம் அன்று  காக்கா குருவிகளுக்கு அன்னமிடுவதும் இந்தப்பழமொழியின் விளக்கம்.

இரண்டுமஞ்சள் இலைகளை அல்லது வாழை இலைகளை கிழக்குமுகமாய் ஆற்றங்கரையிலோ அல்லது வீட்டு மொட்டைமாடியிலோ கோலமிட்டு அதன்மீது வைக்கவேண்டும்.

முதல்நாள் பொங்கிய சாதத்தில் மஞ்சள்பொடிதூவி மஞ்சள்சாதம் கொஞ்சம், குங்குமம் கலந்த சிவப்பு சாதம் கொஞ்சம், வெள்ளையாய் பால்சாதம் கொஞ்சம், வெல்லம் சேர்த்த சக்கரைப்பொங்கல் கொஞ்சம் லேசாய் தயிர் சேர்த்த தயிர்சாதம் என 5வகை அன்னங்களை தயாரிக்கவேண்டும்.

ஒவ்வொன்றிலும் 5அல்லது 7பிடி எடுத்து இலைமீது வரிசையாய் வைக்கும்போது,"காக்காப்பிடி வச்சேன் கணூப்பிடி வச்சேன் ... காக்கைக்கு எல்லாம் கல்யாணம்..கண்டவர்க்கெல்லாம் சந்தோஷம்....கூடப்பிறந்த சகோதர்கள் எந்நாளும் குறைவில்லாமல் சந்தோஷமாய் வாழணும்" என்று சொல்லிக்கொண்டே வைக்கவேண்டும்.
தீபம் ஏற்றிவிட்டு ஆரத்தி கரைத்து ஆற்றில் விடவேண்டும்.. வீட்டிலென்றால் வாசலில் கொட்டவேண்டும்.

உடன்பிறந்தவர்கள் உள்ளூரில் இருந்தால் அவர்களை  அழைத்து  சாதம் பாயசம் செய்து விருந்து போடலாம்.

அவர்கள் தரும் அன்பளிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். அனைவரும் அன்று குடும்பத்தில் ஒன்றுகூடி காணப்படுவதனாலோ என்னவோ  இது காணும் பொங்கல் ஆகி இருக்கலாம்!

என் உடன் பிறந்த ஒருவரோடு  உடன்பிறக்காத அன்புச் சகோதரர்கள் அனைவருக்கும் காணும்பொங்கல்  நாளில் நலம் வாழ வேண்டிக்கொள்கின்றேன்..!

Monday, December 26, 2011

சனிப் பெயர்ச்சி பலன் 2011 - 2014

கர வருடம் , மார்கழி  மாதம் , 5ஆம் திகதி  புதன்கிழமை  (21.12.2011)   நாளில் சரியாக காலை 6:55 மணிக்கு கன்னி  ராசியில்  இருந்து  தன்னுடைய  உச்ச       வீ டான துலாம்  ராசிக்குள்  நுழையும்  சனி பகவான்  ஏறகுறைய  16.12.2014 வரை , துலாம்  ராசியிலேயே அமர்ந்து தனது ஆதிக்கத்தை செலுத்துவார்.

ரிஷபம், சிம்மம், தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சி திடீர் யோகங்களையும்  திடீர் அதிர்ஷ்டத்தையும் அள்ளித் தரும்.

மிதுனம், கன்னி, துலாம், மகரம், மற்றும் கும்ப ராசிக்காரர்களுக்கு மத்திம பலன்கள் உண்டாகும். 

மேஷம், கடகம், விருச்சிகம், மற்றும் மீன
ராசிக்காரர்களுக்கு காரியத் தடைகள் , சிறு சிறு பாதிப்புகள் வந்து நீங்கும்.

சனிப்  பெயர்ச்சி பலன்களை பார்க்க பின்வரும் link ஐ click செய்யவும்..

http://www.tubetamil.com/view_video.php?viewkey=e7e254e5e76c8b7317ac&page=&viewtype=&category=


தொடரும்...



Friday, August 26, 2011

வாழத் தெரியாதவள்

என்னைப் பற்றிப் பேசினேன்,
சுயபுராணம் என்றனர்...

மற்றவர்களைப் பற்றிப் பேசினேன்,
பொறாமை என்றனர்...

சமூகத்தைப் பற்றிப் பேசினேன்,
பிழைக்கத் தெரியாதவள் என்றனர்...

சிரித்துப் பேசினேன், சூழ்ச்சிக்காரி என்றனர்..
சிரிக்காமல் பேசினேன், நயவஞ்சகி என்றனர்..

அமைதி காத்தேன், உம்மனாமூஞ்சி என்றனர்..
மௌனமானேன், 
வாழத் தெரியாதவள் என்றனர்....

Thursday, August 25, 2011

அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்?


அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்?

அருந்ததி என்ற பெயருக்கு கணவனின் எண்ணம் அறிந்து கற்பு நெறியுடன் வாழ்பவள். திருமண பந்தத்தில் இணையும் நாள்வரை, மணப்பெண்ணானவள் தன்னையும் தன் உடலையும்  பிறர் பார்த்ததால், திருமண நாளில் தனது உடலை அக்னிக்குள் சமர்ப்பித்து தன்னைப் பரிசுத்தப்படுத்திக்கொள்வதுடன், தன்னைத் திருமணம் செய்துகொள்பவளின் பாவங்களையும் அதே அக்னியில் சாட்சியாக நீக்கி, பரிசுத்தப்படுத்தி, தன் ஆற்றல் சக்கரத்தை கணவனுக்கு முழுமையாகக் கொடுத்து புருவ மத்தியில் திலகமாக ஏற்றுக்கொள்கிறாள். கணவனிடம் சரணாகதி அடைகிறாள். பெண்ணின் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவன் மணப்பெண்ணைப் பார்த்து, இனி நான் உனது உயிர்மூச்சாகவும் கல்லைப் போல மன உறுதியுடனும் இருந்து உன் வாழ்க்கைக்கு வழிகாட்டுவேன் என்பதை, வசிஷ்ட மகரிஷியின் சாட்சியாக உன் காலை அம்மிமீது வைத்து அதன் சாட்சியாக உன் காலில் மெட்டியைச் சூட்டுகின்றேன் என்று கூறுகின்றான். மணப்பெண்ணானவள், தன் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவனுக்கு அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டி அருந்ததியைப் போல் ஏழு ஜன்மங்களிலும் உமக்கு மட்டும் மனைவியாக இருப்பேன் என்று சத்யப்பிரமாணம் செய்கின்றாள். அக்னியில் பிறந்த பெண், அக்னியாலேயே பரிசுத்தப்படுத்திக்கொண்டு ஆணையும் பரிசுத்தப்படுத்தி திருமணம் எனும் தெய்வீக பந்தத்துக்குள் இணைந்து அர்த்தநாரீஸ்வரியாகத் திகழ்கின்றாள்.

Wednesday, February 02, 2011

நம்ம வீட்டு கல்யாணம்

  சிலந்தி  அகடமி வழங்கும் நம்ம வீட்டு கல்யாணம்

இன்னிக்கு நம்ம வீட்டு  கல்யாணம் நிகழ்ச்சில இரு மனங்கள் இணைந்து மகிழ்ந்த  திருமணம் பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கின்றனர்  திருவாளர் திருமதி அவர்கள் ... வாங்க இவங்க என்ன சொல்றாங்கன்னு கேட்கலாம்/



 திருவாளர் : எங்களோட கல்யாணம் ஒரு காதல் கல்யாணம் ... ஒரு திருட்டு மாங்கா பறிக்கும் போது தான் எங்களோட முதல் சந்திப்பு நிகழ்ந்தது ...

என்னவோ தெரியல இவள பார்த்த உடனே பிடிச்சிபோயிடுச்சு  ... அதனால அந்த மாங்காவா நான் அவளுக்கு விட்டு கொடுத்துட்டேன் .. அப்புறம் அவள நான் தொடர்ச்சியா சந்திப்பதற்கு வாய்ப்புகிடைக்கல ... ஏன்னா அவ வேற கூட்டம் நான் வேற கூட்டம் ...

திருமதி: ஹா ஹா ... இவர் பொய் சொல்லுகிறார் ... இவருக்கு  ஒரு நாள் என்ன பார்கலைன்னா கூட தூக்கமே வராது ... எந்த மரத்துலயாச்சும் உக்கார்ந்து

என்ன பார்த்துகிட்டே இருப்பார் ... அப்புறம் மரத்துக்கு மரம் கிளைக்கு கிளை தாவி என் கவனத்த ஈர்த்துகிட்டே இருப்பார் ... அப்புறம் எனக்கும் ஒரு மாதிரியா இவர் மேல காதல் வந்திடுச்சி ...

திருவாளர் : இவளுக்கு என் மேல காதல் வரதுக்குள்ள நான் பட்ட பாடு கொஞ்ச நஞ்சம் அல்ல ... அந்த தெருகோடி இனிப்பு புளியமரத்துல குத்தகை காரனுக்கு தெரியாம இனிப்பு புளியம்பழம் பறிச்சி கொடுத்து தான் இவளுக்கு நான் காதலனாவே ஆனேன் ...

திருமதி : ஹா ஹா ஹா ....

பார்த்தீங்களா .. இவங்களோட காதல் அனுபவம் எவ்ளோ மொக்கையா இருந்ததுன்னு ... வாங்க நேயர்களே .. இவங்க காதலித்த காலங்களில் எங்க எல்லாம் ஊரு சுத்தினாங்க எப்படி எல்லாம் நேரத்த செலவு பண்ணினாங்கன்னு அவங்களே சொல்றாங்க  ... வாங்க கேட்கலாம் ..


திருவாளர் : அப்போலாம் நாங்க ரெண்டு பேரும் சுத்தாத தோப்பு கிடையாது .. ஏறாத மரம் கிடையாது ... திருடி திங்காத காய் பழம் கிடையாது ... நாங்க சுத்த ஆரம்பிச்சதே ... இவளுக்கு சூரியன் பட்ட செம்மஞ்சள் நிற மாங்காய் பறிக்க தான் ... அந்த தெரு வாண்டுகள் கிட்ட போட்டி போட்டு நான் அந்த மாங்காய பறிச்சி இவளுக்கு கொடுப்பேன் ...



திருமதி : எங்களோட பொழுதுபோக்கே நான் இவருக்கும் இவர் எனக்கும்மா பேன் பார்த்துகிட்டே பேசிகிட்டு இருக்குறது தான் .. எங்களுக்கு ரொம்ப பிடிச்ச போழுபோக்கும் அது தான் ...



வெட்டி மொக்கைகளோட மொக்கை போலவே இவங்களோட பொழுதுபோக்கும் ரொம்பவே வித்த்யாசமானதாய் இருந்தது அல்லவா நேயர்களே ... 

இவங்களோட காதல் இவங்களோட பெற்றோர்களுக்கு எப்படி தெரிந்ததுன்னு சொல்ல போறாங்க .. கேட்கலாம் வாங்க ..

திருவாளர்: ரொம்ப நாள் வரைக்கும் எங்களோட காதல் எங்க ரெண்டு பேர் வீட்டுக்கும் தெரியாது ... நாங்க பழகினத கூட அவங்க ஆரம்ப கால கட்டத்துல இயல்பானதா தான் எடுத்துகிட்டாங்க ... போக போக தான் எங்க மேல சந்தேகம் வந்தது ... அப்புறம் ஒரு வழியா எங்க மேட்டர் எங்க கூட்டத்துக்கு தெரிஞ்சி ஆதரவும் எதிர்ப்பும் சமமா இருந்தது ...

திருமதி: நான் ரொம்ப பயந்துகிட்டே இருந்தேன் ... எப்படி எல்லாரையும் சமாளிச்சி இவர திருமணம் பண்ணிக்கபோரோமொன்னு ...

காதல் என்றாலே ... எதிர்ப்புகள சமாளிச்சி தான் ஆகனும் ... இவங்க எப்படி சமாளிச்சாங்கன்னு இவங்களே சொல்லுறாங்க ... வாங்க இவங்க எப்படி சமாளிச்சாங்கன்னு கேக்கலாம் ...

திருவாளர்: எங்க வீட்டு சைடு அவ்வளவா எதிர்ப்பு இல்ல ... அவங்க வீட்டுல தான் எல்லாரையும் சமாளிக்க வேண்டி இருந்தது ... எல்லாருக்கும் மாங்கா தேங்கா பறிச்சி கொடுத்து ஒவொருத்தரா சரி கட்டி எல்லார் கிட்டவும் எங்க கல்யாணத்துக்கு அனுமதி வாங்கினோம் ... இவளோட அப்பா மட்டும் ஐந்து இளநீர் , ஏழு மாங்காயா தின்னுட்டு தான் ஒத்துகிட்டார் ...


திருமதி: எங்களோட திருமணம் ஒருவழியா நிச்சயமாகிடுச்சி ... எங்க ரெண்டு பேர் கூட்டத்துலயும் சேர்த்து மொத்தம் ஒரு ஐம்பத்துஅஞ்சு பேர் தான் ... எல்லாரையும் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தே போயி தான் எங்களோட திருமணத்துக்கு நேரடியா அழைச்சோம் ...

துன்பத்திலும் இன்பம் என்பது இதுதானோ ... வாங்க இவங்க திருமணம் எப்படி நடந்ததுன்னு கேட்கலாம் ...

திருமதி : எங்களோட திருமணம அந்த தோப்புலையே
இருக்குற பெரிய மரத்துல தான் நடந்தது ... எல்லா சொந்தபந்தம்னு எல்லாருமே வந்திருந்தாங்க ...



திருவாளர் : எங்களோட ஹனி மூனுக்கு  நாங்க பக்கத்து தோப்புக்கு போனோம் ... அங்க கடலைக்காடு ... தென்னந்தோப்பு ... ன்னு நல்லா சுத்தினோம் ... அங்க ஒரு பெரிய குளம் இருந்தது .. அங்க டைவ் குளிச்சத எங்களால எப்பவுமே மறக்க முடியாது ...


இவங்க காதலிக்கும் போதும் சரி .. ஹனிமூன்லையும் சரி ரொம்ப நல்லாவே என்ஜாய் பண்ணி இருகாங்க ... இவங்கள பத்தி இவங்க பெற்றோர் என்ன சொல்றாங்கன்னு கேட்கலாம் வாங்க ...

திருவாளரின் பெற்றோர்: ஆரம்பத்துல இவங்க காதல்ல எங்களுக்கு உடன்பாடு இல்ல ... இவன் ரொம்பவே பிடிவாதமா இருந்ததால தான் நாங்க இந்த திருமணத்துக்கே சம்மதிச்சோம் ...



நாங்கள தேடி இருந்தா கூட இப்டி ஒரு மருமக எங்களுக்கு கிடைச்சிருக்க மாட்டா ...

திருமதியின் பெற்றோர்: எங்க மாப்பிள்ளையோட அன்பு தான் நாங்க இந்த திருமணத்துக்கு சம்மதிக்க காரணம் ... ( மாபிள்ள ... அந்த இளநீர மறந்திடாதிங்க ... )

திருவாளர் ரொம்ப சாமர்த்தியமா எல்லாரையும் சமாளிச்சி தான் இந்த திருமணத்திற்கே எல்லாரையும் சம்மதிக்க வைத்திருக்கார் ... வாங்க இவரோட திருமண வாழ்க்கை பற்றி இவர் சொல்லுறத கேட்கலாம் ...

திருவாளர் : எங்களோட திருமண வாழ்க்கை ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு ... இவர் தான் எங்க வீட்டு செல்லம் ... எங்க வாழ்க்கையின் அர்த்தமும் இவர் தான் எங்க செல்ல ஜுனியர் ...



திருமதி : இப்போவே இவன் எவ்ளோ சுட்டி தெரியுமா ... கொஞ்ச நேரம் சும்மாவே இருக்க மாட்டான் ... அவ்ளோ துறுதுறு ... மரத்துக்கு மரம் தாவிகிட்டு ... எல்லார்கிட்டவும் வம்பிழுத்துகிட்டு ...

இவங்க அன்பின் அடையாளமாய் ஜுனியர் ... இவங்க இன்று போல் என்றும் இனிமையாய் அன்புடன் பல்லாண்டு வாழ வாழ்த்துவோம் நேயர்களே ... மீண்டும் வேறொரு திருமண தம்பதிகளுடன் மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுவது சிலந்தி  நாயகம் ......
வணக்கம் நேயர்களே :-D


நன்றி : remake 

Sunday, October 31, 2010

"ராஜ ராஜ சோழன் நான்"

"ராஜ ராஜ சோழன் நான்" ...
என்னுடைய மொபைல் அழைத்தது ... காலையிலிருந்து இது நான்காவது தடவை ...என் கண்மணியின்  சிரித்த முகத்துடன் கூடிய போட்டோ மொபைலில்...


"சொல்லுமா"

"என்னங்க அப்புறம் காய்கறி வாங்கணும்... மறக்காம சீககரம் வந்துடுங்க..."

வரேன்.. வரேன்."

"இல்ல... வரும்போது பாஸ் வேணும்... அதுக்குத்தான்..."


"ஓகே!ஓகே! அப்புறம் ஒரு கிலோ வெங்காயம் வேணும், வாஷிங் மெசின்
வேணும்,அப்புறம்!" 


"கிண்டல் பண்ணா தீங்க ! பாஸ் மட்டும் போதும்"

வேலையில் மூழ்கி இருந்த என்னை நண்பர் கூப்பிடும் போதுதான் சாப்பாட்டுக்கு நேரம் ஆனது தெரிந்தது ... இப்போ தினமும் கண்மணி சமையல்... எந்தக் கடுப்பும்  இல்லை..


"ராஜ ராஜ சோழன் நான் ...மொபைல் அழைத்தது

"ஹலோ ,கன்டீன்ல இருக்கேன் , சொல்லுமா .. சாப்பாடா? ...கரெக்டா இருக்கு மா !! ...சுட சுட சாப்பிட்டு இருந்தா  சூப்பரா  இருந்து இருக்கும் ..
சரி .. சீக்கரமே வரேன் ..அப்புறம் ..சொல்லு ...

என்ன deep silence... ஏதாவது பிரச்சனையா ... வீட்ல இருந்து ஏதாவது போன் ?....என்னனு சொன்னதானே ..தெரியும் ..."


ஒண்ணும் இல்லை ...


ஓகே ... அப்புறம் call பண்றன் ..."

இந்த உலகத்தில் எல்லோருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் .. நாம் எந்த வேலை செய்வதா இருந்தாலும் ...அதை பத்தி மற்றவங்களோட கருத்து என்ன அப்படின்னு தெரிஞ்சிக்கிரதுல
ரொம்ப ஆர்வம் இருக்கும் ...

நான் அப்படி எல்லாம் இல்லை ...எவன் என்ன சொன்னா  எனக்கு என்ன ..
எனக்கு புடிச்சிருக்கு நான் பண்றேன் ..

அதனாலே சாப்பிடும்போதும் சரி ... சாப்பிட்ட பிறகும் சரி ...அது எப்படி இருந்தது ... என்ன நிறை என்ன குறைன்னு ஒரு detailed analysis report குடுக்கணும்  என்  கண்மணிக்கு ....
வீட்டு சாப்பாடு கமெண்ட்ஸ் அடிக்க முடியாது ..

"கமெண்ட்ஸ் அடிக்கலைன்னா பரவாயில்லை ...compliments குடுக்கலாம்ல ?" -இது கண்மணி ...

"நீயே சொல்லு ! ...'சாப்பிட்ட பின்னாடி .. கொழம்பு சூப்பர் ,ரசம் ரசிச்சிட்டே சாப்பிட்டேன் ..மோர்  ..I want more...அந்த உறுகாய் பின்னிட்ட ...(ஒ ...அது கடைல வாங்கினதா ...) இருந்தாலும் அந்த combination  நீதானே  பண்ணே ..so first கிளாஸ்...இப்படி தினமும் சொன்னா..உனக்கே ஒரு நாள் போர் அடிச்சிடும் ..."

"பரவாயில்லை போர் அடிக்கிற வரைக்கும் சொல்லுங்க ..."
(நம்ம கருத்துக்கு என்னைக்கு மரியாதை இருந்தது ....)

"ஹே ! இன்னிக்கு ஒரே அசத்தல் சாப்பாடு போ !! ... அதுவும் அந்த பருப்பு பாயசம் ....கலக்கல் ...அப்புறம் அந்த வாழைப்பழ chips  அருமை..ஓகே ஓகே :-) நல்லா இருந்தது ..ஸ்பெஷலா இருந்தது ...."

 (எனக்காக பார்த்து பார்த்து சமையல் பண்ணி அது எப்படி இருந்ததுன்னு கேட்டு சந்தோஷப்படறது ஒரு தனி மகிழ்ச்சி என் கண்மணிக்கு)
...........................................................................................................................

டீ குடிக்கறப்போ வந்த நினைவுகள் ....சரி  மிச்ச வேலை பாக்கலாம்னு போகும்போது ...
 
"ராஜ ராஜ சோழன் நான் " திரும்ப மொபைல் அழைத்தது... 

"ஆமாம் ...கொஞ்சம் வேலை இன்னிக்கு ..கோவிலுக்கா ...திடீர்ன்னு என்ன ?
"சரி ...போலாம் ..ஒண்ணும் பிரச்சனை இல்லை ...நீ ஆபீஸ்ல இரு நான் வந்து பிக்-அப் பண்ணிக்கிறேன் ...ஓகே ...இன்னும் அரைமணி நேரத்துல கிளம்பறேன் ...

சண்டையே இல்லாம வாழ்க்கை நல்லா இருக்காது ..ஒரு த்ரில் இருக்காது ... அப்பப்போ இந்த சண்டைதான் தம்பதிக்குள்ள இருக்கிற அன்யோன்யத்தை அதிகரிக்கும் .(எவண்டா சொன்னது இந்த சுண்டைக்காய் தத்துவத்தை)


எனக்கு நினைவு தெரிஞ்சு எங்களுக்குள்ளே சண்டை வந்தது இல்லை..அதனால அன்யோன்யம் இல்லைனு

சொல்றதா ...ஏன் ? பிரச்சனையே இல்லாம வாழ்க்கை அப்பிடியே போகாதா ?
 
"ராஜ ராஜ சோழன் நான் " ...
"இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன் ... டிராபிக்மா .."


"ஹே ! என்ன இது புடவை ...பூ ..கலக்கற போ...
 
"அதெல்லாம் ஒண்ணும் இல்ல ! ஒரு மாறுதலுக்குதான் ...."
 
"சரிமா ! எந்த கோயில் எல்லாம் முடிவு பண்ணியாச்சு இல்லையா ....கோயில்க்கு அப்புறம் ?"
"ஏங்க ?"
"சொல்லுமா ..."
"எங்கேயாவது ஹோட்டல்க்கு போலாமா ?"
"ஏன்மா ?..இன்னிக்கு டிபன் இல்லையா ? ஹய்யா ஜாலி.... புடவை கட்டினதுல டையர்டா இருக்கியா? "
"இல்ல ...சும்மாதான் ..
 
"சரி "
 
"அதான் சரி சொல்லிட்டேன்ல ..அப்புறம் ஏன் முகத்தை ஒரு மாதிரி வைச்சி இருக்கே ? உடம்பு சரியில்லையா ?"

"ஒண்ணும் இல்ல போங்க "
..........................................................................................................



"ஹே ! சந்திரன் வண்டி ! வீட்டுக்கு வந்து இருக்கானா என்ன??  

மச்சி happy  wedding  anniversary  டா !!! (நண்பன்)

"தேங்க்ஸ் டா  ! என்னடா Gift ரொம்பா கனமா இருக்கு ?

"ஓப்பன் பண்ணி பாருடா ! அப்புறம் என்ன ஸ்பெஷல் இன்னைக்கு ?" (நண்பன்)

"கோயில் ,வெளிய போய் lighta டிபன் , அப்புறம் இதோ வீட்டுக்கு , என் கையாலதான்  சாப்பிடனும்னு என் கண்மணி சொல்லிட்டா !

"அப்படி  நான் ஒன்னும் சொல்லவே இல்லையே...!!! (என் கண்மணி)
"Shhhh..."
வெயிட் பண்ணுங்க உங்களுக்கும் சேர்த்து டிபன் பண்ணிடறேன் !"(என்  கண்மணி)
 
"இல்லைங்க ! கொஞ்சம் வேலை இருக்கு , நான் இன்னொரு நாள் வரேன் !" (நண்பன்)
 
"மச்சி ! தப்பிச்சிட்ட !!!"

"சும்மா இருங்க !!"  (என் கண்மணி)
....................................................
"என்னம்மா ஒரு மாதிரி ஆகிட்டே ! I am sorry! அதான் சொல்றேன்ல ஆபீஸ் வொர்க்ல சுத்தம்மா மறந்துட்டேன் ...
நான் ஒரு மடையன் ! கோயில் , புடவை , பாயசம் , எதுவுமே தோணலை பாரு ! Sorry ! Sorry !"'

"எப்படிங்க ! இப்படி ஒரு முக்கியமான நாள் உங்களுக்கு மறந்து போகும் ! என்னமோ Gift தருவேன் , அது இது சொன்னிங்க , ஒரு ஈமெயில் கூட அனுப்பலே ! hmmmm...."

"Sorry சொல்லிட்டேன்ல ! ஆமா இன்னிக்கு full day ஆபீஸ்ல தானே இருந்தே நீ !

"ஆமா.. ஏன் ?"

"இல்ல சும்மாதான் கேட்டேன் !Sorry again! நாளைக்கு ஜாமாய்ச்சிடலாம் !"
 
"நீங்களே தனிய போய் ஜமாய்ங்க !"
.......................................................................................................................




"என்னடி ! நேத்து ஒரே மஜாவா ! என்ன வாங்கி தந்தார் உங்க வீட்டுகார் ?

"போடி ! அவர் வேலை விஷயத்துல wedding டே  மறந்துட்டார் !!!

ரொம்ப கஷ்டமா போச்சு எனக்கு ...அப்புறம் நானே கோயில் ,அங்கே இங்க போகணும் சொல்லி கூட அவருக்கு ஞாபகம் வரலை ..."

அப்படியா? அவர் ஒன்னு விட்ட சித்தப்பாவுக்கு B'day  cardஅனுப்புறவர்னு சொல்லி இருக்கே ...எப்படி உங்க wedding day மிஸ் பண்ணார் ??
 
அதாண்டி தெரியல ! 

"சரி ! ரொம்பா feel பண்ணாத ! எல்லாம் சரியாகிடும் "

"மேடம் ! உங்களுக்கு நேத்து ஒரு Courier வந்தது , நீங்க சீட்ல இல்லை , சொல்ல மறந்துட்டேன் , இந்தாங்க மேடம் "
.......................................................................................................................................



"டேய் படவா ! சத்தமே போடாம இவ்ளோ காஸ்ட்லியான ஒரு Diamond பென்டன Courier பண்ணிட்டு , ஏன் என்கிட்டே சொல்லவே இல்ல...

ஏன் நைட்  திட்டு வாங்கினீங்க?? I am sorry ........100 வது தடவை sorry கேக்கிறேன்..... 

அதான் பரவாயில்லைனு சொல்லிட்டேன்ல "

"எந்த தைரியத்துல நீங்க  Courier பண்ணீங்க??
 
"Couriera? நான் நேர்ல வந்தில்லையா  குடுத்தேன் !

அட பாவி ! இவ்ளோ பண்ணவன் , என் கையிலே குடுத்து இருக்கலாம் இல்ல !
 
"எல்லாம் ஒரு ஸர்ப்பரைஸா இருக்கட்டும்னு தான் ..."

"மண்ணாங்கட்டி ஸர்ப்பரைஸ் ...!!!! உங்கள .......

(அப்புறம்  என்ன ...சொல்லவா வேண்டும் ???????????)
ராஜ ராஜ சோழன் நான் ...எனை ஆளும் காதல் தேசம் நீதான் "...

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே!
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே!
விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ
புகழ் மைந்தன் தோன்றினானே!
கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே!
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே!
போர் கொண்ட பூமியில் பூக்காடு காணவே
புகழ் மைந்தன் தோன்றினானே!

கோரஸ் : புகழ் மைந்தன் தோன்றினானே!

கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும்
கருணை மகன் தோன்றினானே!
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்
ஒளியாகத் தோன்றினானே!
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே
இறைபாலன் தோன்றினானே!
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே
புவிராஜன் தோன்றினானே!

-அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே..

மின்சாரக் கனவு
கவியரசு வைரமுத்து
அனுராதா ஸ்ரீராம்
ஏ.ஆர். ரகுமான்