VANAKKAM Silanthinaayagam WELCOMES u !!!

Sunday, October 31, 2010

"ராஜ ராஜ சோழன் நான்"

"ராஜ ராஜ சோழன் நான்" ...
என்னுடைய மொபைல் அழைத்தது ... காலையிலிருந்து இது நான்காவது தடவை ...என் கண்மணியின்  சிரித்த முகத்துடன் கூடிய போட்டோ மொபைலில்...


"சொல்லுமா"

"என்னங்க அப்புறம் காய்கறி வாங்கணும்... மறக்காம சீககரம் வந்துடுங்க..."

வரேன்.. வரேன்."

"இல்ல... வரும்போது பாஸ் வேணும்... அதுக்குத்தான்..."


"ஓகே!ஓகே! அப்புறம் ஒரு கிலோ வெங்காயம் வேணும், வாஷிங் மெசின்
வேணும்,அப்புறம்!" 


"கிண்டல் பண்ணா தீங்க ! பாஸ் மட்டும் போதும்"

வேலையில் மூழ்கி இருந்த என்னை நண்பர் கூப்பிடும் போதுதான் சாப்பாட்டுக்கு நேரம் ஆனது தெரிந்தது ... இப்போ தினமும் கண்மணி சமையல்... எந்தக் கடுப்பும்  இல்லை..


"ராஜ ராஜ சோழன் நான் ...மொபைல் அழைத்தது

"ஹலோ ,கன்டீன்ல இருக்கேன் , சொல்லுமா .. சாப்பாடா? ...கரெக்டா இருக்கு மா !! ...சுட சுட சாப்பிட்டு இருந்தா  சூப்பரா  இருந்து இருக்கும் ..
சரி .. சீக்கரமே வரேன் ..அப்புறம் ..சொல்லு ...

என்ன deep silence... ஏதாவது பிரச்சனையா ... வீட்ல இருந்து ஏதாவது போன் ?....என்னனு சொன்னதானே ..தெரியும் ..."


ஒண்ணும் இல்லை ...


ஓகே ... அப்புறம் call பண்றன் ..."

இந்த உலகத்தில் எல்லோருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் .. நாம் எந்த வேலை செய்வதா இருந்தாலும் ...அதை பத்தி மற்றவங்களோட கருத்து என்ன அப்படின்னு தெரிஞ்சிக்கிரதுல
ரொம்ப ஆர்வம் இருக்கும் ...

நான் அப்படி எல்லாம் இல்லை ...எவன் என்ன சொன்னா  எனக்கு என்ன ..
எனக்கு புடிச்சிருக்கு நான் பண்றேன் ..

அதனாலே சாப்பிடும்போதும் சரி ... சாப்பிட்ட பிறகும் சரி ...அது எப்படி இருந்தது ... என்ன நிறை என்ன குறைன்னு ஒரு detailed analysis report குடுக்கணும்  என்  கண்மணிக்கு ....
வீட்டு சாப்பாடு கமெண்ட்ஸ் அடிக்க முடியாது ..

"கமெண்ட்ஸ் அடிக்கலைன்னா பரவாயில்லை ...compliments குடுக்கலாம்ல ?" -இது கண்மணி ...

"நீயே சொல்லு ! ...'சாப்பிட்ட பின்னாடி .. கொழம்பு சூப்பர் ,ரசம் ரசிச்சிட்டே சாப்பிட்டேன் ..மோர்  ..I want more...அந்த உறுகாய் பின்னிட்ட ...(ஒ ...அது கடைல வாங்கினதா ...) இருந்தாலும் அந்த combination  நீதானே  பண்ணே ..so first கிளாஸ்...இப்படி தினமும் சொன்னா..உனக்கே ஒரு நாள் போர் அடிச்சிடும் ..."

"பரவாயில்லை போர் அடிக்கிற வரைக்கும் சொல்லுங்க ..."
(நம்ம கருத்துக்கு என்னைக்கு மரியாதை இருந்தது ....)

"ஹே ! இன்னிக்கு ஒரே அசத்தல் சாப்பாடு போ !! ... அதுவும் அந்த பருப்பு பாயசம் ....கலக்கல் ...அப்புறம் அந்த வாழைப்பழ chips  அருமை..ஓகே ஓகே :-) நல்லா இருந்தது ..ஸ்பெஷலா இருந்தது ...."

 (எனக்காக பார்த்து பார்த்து சமையல் பண்ணி அது எப்படி இருந்ததுன்னு கேட்டு சந்தோஷப்படறது ஒரு தனி மகிழ்ச்சி என் கண்மணிக்கு)
...........................................................................................................................

டீ குடிக்கறப்போ வந்த நினைவுகள் ....சரி  மிச்ச வேலை பாக்கலாம்னு போகும்போது ...
 
"ராஜ ராஜ சோழன் நான் " திரும்ப மொபைல் அழைத்தது... 

"ஆமாம் ...கொஞ்சம் வேலை இன்னிக்கு ..கோவிலுக்கா ...திடீர்ன்னு என்ன ?
"சரி ...போலாம் ..ஒண்ணும் பிரச்சனை இல்லை ...நீ ஆபீஸ்ல இரு நான் வந்து பிக்-அப் பண்ணிக்கிறேன் ...ஓகே ...இன்னும் அரைமணி நேரத்துல கிளம்பறேன் ...

சண்டையே இல்லாம வாழ்க்கை நல்லா இருக்காது ..ஒரு த்ரில் இருக்காது ... அப்பப்போ இந்த சண்டைதான் தம்பதிக்குள்ள இருக்கிற அன்யோன்யத்தை அதிகரிக்கும் .(எவண்டா சொன்னது இந்த சுண்டைக்காய் தத்துவத்தை)


எனக்கு நினைவு தெரிஞ்சு எங்களுக்குள்ளே சண்டை வந்தது இல்லை..அதனால அன்யோன்யம் இல்லைனு

சொல்றதா ...ஏன் ? பிரச்சனையே இல்லாம வாழ்க்கை அப்பிடியே போகாதா ?
 
"ராஜ ராஜ சோழன் நான் " ...
"இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன் ... டிராபிக்மா .."


"ஹே ! என்ன இது புடவை ...பூ ..கலக்கற போ...
 
"அதெல்லாம் ஒண்ணும் இல்ல ! ஒரு மாறுதலுக்குதான் ...."
 
"சரிமா ! எந்த கோயில் எல்லாம் முடிவு பண்ணியாச்சு இல்லையா ....கோயில்க்கு அப்புறம் ?"
"ஏங்க ?"
"சொல்லுமா ..."
"எங்கேயாவது ஹோட்டல்க்கு போலாமா ?"
"ஏன்மா ?..இன்னிக்கு டிபன் இல்லையா ? ஹய்யா ஜாலி.... புடவை கட்டினதுல டையர்டா இருக்கியா? "
"இல்ல ...சும்மாதான் ..
 
"சரி "
 
"அதான் சரி சொல்லிட்டேன்ல ..அப்புறம் ஏன் முகத்தை ஒரு மாதிரி வைச்சி இருக்கே ? உடம்பு சரியில்லையா ?"

"ஒண்ணும் இல்ல போங்க "
..........................................................................................................



"ஹே ! சந்திரன் வண்டி ! வீட்டுக்கு வந்து இருக்கானா என்ன??  

மச்சி happy  wedding  anniversary  டா !!! (நண்பன்)

"தேங்க்ஸ் டா  ! என்னடா Gift ரொம்பா கனமா இருக்கு ?

"ஓப்பன் பண்ணி பாருடா ! அப்புறம் என்ன ஸ்பெஷல் இன்னைக்கு ?" (நண்பன்)

"கோயில் ,வெளிய போய் lighta டிபன் , அப்புறம் இதோ வீட்டுக்கு , என் கையாலதான்  சாப்பிடனும்னு என் கண்மணி சொல்லிட்டா !

"அப்படி  நான் ஒன்னும் சொல்லவே இல்லையே...!!! (என் கண்மணி)
"Shhhh..."
வெயிட் பண்ணுங்க உங்களுக்கும் சேர்த்து டிபன் பண்ணிடறேன் !"(என்  கண்மணி)
 
"இல்லைங்க ! கொஞ்சம் வேலை இருக்கு , நான் இன்னொரு நாள் வரேன் !" (நண்பன்)
 
"மச்சி ! தப்பிச்சிட்ட !!!"

"சும்மா இருங்க !!"  (என் கண்மணி)
....................................................
"என்னம்மா ஒரு மாதிரி ஆகிட்டே ! I am sorry! அதான் சொல்றேன்ல ஆபீஸ் வொர்க்ல சுத்தம்மா மறந்துட்டேன் ...
நான் ஒரு மடையன் ! கோயில் , புடவை , பாயசம் , எதுவுமே தோணலை பாரு ! Sorry ! Sorry !"'

"எப்படிங்க ! இப்படி ஒரு முக்கியமான நாள் உங்களுக்கு மறந்து போகும் ! என்னமோ Gift தருவேன் , அது இது சொன்னிங்க , ஒரு ஈமெயில் கூட அனுப்பலே ! hmmmm...."

"Sorry சொல்லிட்டேன்ல ! ஆமா இன்னிக்கு full day ஆபீஸ்ல தானே இருந்தே நீ !

"ஆமா.. ஏன் ?"

"இல்ல சும்மாதான் கேட்டேன் !Sorry again! நாளைக்கு ஜாமாய்ச்சிடலாம் !"
 
"நீங்களே தனிய போய் ஜமாய்ங்க !"
.......................................................................................................................




"என்னடி ! நேத்து ஒரே மஜாவா ! என்ன வாங்கி தந்தார் உங்க வீட்டுகார் ?

"போடி ! அவர் வேலை விஷயத்துல wedding டே  மறந்துட்டார் !!!

ரொம்ப கஷ்டமா போச்சு எனக்கு ...அப்புறம் நானே கோயில் ,அங்கே இங்க போகணும் சொல்லி கூட அவருக்கு ஞாபகம் வரலை ..."

அப்படியா? அவர் ஒன்னு விட்ட சித்தப்பாவுக்கு B'day  cardஅனுப்புறவர்னு சொல்லி இருக்கே ...எப்படி உங்க wedding day மிஸ் பண்ணார் ??
 
அதாண்டி தெரியல ! 

"சரி ! ரொம்பா feel பண்ணாத ! எல்லாம் சரியாகிடும் "

"மேடம் ! உங்களுக்கு நேத்து ஒரு Courier வந்தது , நீங்க சீட்ல இல்லை , சொல்ல மறந்துட்டேன் , இந்தாங்க மேடம் "
.......................................................................................................................................



"டேய் படவா ! சத்தமே போடாம இவ்ளோ காஸ்ட்லியான ஒரு Diamond பென்டன Courier பண்ணிட்டு , ஏன் என்கிட்டே சொல்லவே இல்ல...

ஏன் நைட்  திட்டு வாங்கினீங்க?? I am sorry ........100 வது தடவை sorry கேக்கிறேன்..... 

அதான் பரவாயில்லைனு சொல்லிட்டேன்ல "

"எந்த தைரியத்துல நீங்க  Courier பண்ணீங்க??
 
"Couriera? நான் நேர்ல வந்தில்லையா  குடுத்தேன் !

அட பாவி ! இவ்ளோ பண்ணவன் , என் கையிலே குடுத்து இருக்கலாம் இல்ல !
 
"எல்லாம் ஒரு ஸர்ப்பரைஸா இருக்கட்டும்னு தான் ..."

"மண்ணாங்கட்டி ஸர்ப்பரைஸ் ...!!!! உங்கள .......

(அப்புறம்  என்ன ...சொல்லவா வேண்டும் ???????????)
ராஜ ராஜ சோழன் நான் ...எனை ஆளும் காதல் தேசம் நீதான் "...

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே!
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே!
விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ
புகழ் மைந்தன் தோன்றினானே!
கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே!
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே!
போர் கொண்ட பூமியில் பூக்காடு காணவே
புகழ் மைந்தன் தோன்றினானே!

கோரஸ் : புகழ் மைந்தன் தோன்றினானே!

கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும்
கருணை மகன் தோன்றினானே!
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்
ஒளியாகத் தோன்றினானே!
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே
இறைபாலன் தோன்றினானே!
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே
புவிராஜன் தோன்றினானே!

-அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே..

மின்சாரக் கனவு
கவியரசு வைரமுத்து
அனுராதா ஸ்ரீராம்
ஏ.ஆர். ரகுமான்

உயிரும் நீயே உடலும் நீயே

உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே (2)
தன உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து

உறவும் நீயே தாயே (2)
உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும்

கடலும் உருகும் தாயே (2)
உன் காலடி மட்டும் தருவாய் தாயே
சொர்க்கம் என்பது பொய்யே!!! (உயிரும்)

பெண்ணை படைதான் மண்ணை படைதான்
காற்றும் மழையும் ஒளியும் படைதான் (2)
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
சாமி தவித்தான் தாயை படைதான் (உயிரும்)
 
 
படம்           :  பவித்ரா (1994)
இயற்றியவர்  : கவிஞர் வைரமுத்து
இசை          : எ.ர.ரஹ்மான்
பாடியவர்கள் : உன்னிகிருஷ்ணன்

 

கடவுள் தந்த அழகிய வாழ்வு

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்துப்பாடு

கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழனும் நூறு ஆண்டு

எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்
அழகே பூமியின் வாழ்க்கையை
அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுவதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்துப்பாடு

பூமியில் பூமியில்
இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில்
எனக்கொன்றும் குறைகள் கிடையாது

எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ
அதுவரை நாமும் சென்றிடுவோம்
விடைபெறும் நேரம் வரும்போதும்
சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்
பரவசம் இந்த பரவசம் என் நாளும் நெஞ்சில்
தீராமல் இங்கே வாழுவோம்

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்துப்பாடு

நாமெல்லாம் சுவாசிக்க
தனி தனி காத்து கிடையாது
மேகங்கள் மேகங்கள்
இடங்களை பார்த்து பொழியாது
ஓடையில் இன்று இலையுதிரும்
வசந்தங்கள் நாளை திரும்பிவரும்
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்
முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்க்கை சொல்லும் பாடங்கள் தானே கேளடி

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்துப்பாடு


படம்       : மாயாவி(2005)
இயற்றியவர் : பழனி பாரதி
பாடியவர்கள்: எஸ்பிபி, சரண், கல்பனா
இசை      : தேவி ஸ்ரீ பிரசாத்

ஊமை விழிகள்

தோல்வி நிலையென நினைத்தால் – மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?
தோல்வி நிலையென நினைத்தால் – மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?

வாழ்வை சுமையென நினைத்து – தாயின்
கனவை மிதிக்கலாமா?
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால் மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?

விடியலுக்கில்லை தூரம் – விடியும்
மனதில் இன்னும் ஏன் பாரம் – உன்
நெஞ்சம் முழுவதும் வீரம் – இருந்தும்
கண்ணில் இன்னும் ஏன் ஈரம்

உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால் – மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து – தாயின்
கனவை மிதிக்கலாமா?

விடியலுக்கில்லை தூரம் – விடியும்
மனதில் இன்னும் ஏன் பாரம்? – உன்
நெஞ்சம் முழுவதும் வீரம் – இருந்தும்
கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?

யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா?
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?

யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா?

ஊமை விழிகள்(1986)
இயற்றியவர்: ஆபாவாணன்
இசை: மனோஜ் கியான்
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்

Tuesday, October 26, 2010

கேதார கௌரி விரதம்




மாங்கல்ய பாக்யமும், மகிழ்ச்சியும் தரும் கேதார கௌரி விரதம் 






ஆண்டு தோறும் புரட்டாதி மாத சுக்கிலபட்ச தசமி முதல் கிருஸ்ண பட்சத்து சதுர்த்தசியீறாக (ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசை) இருபத்தொரு நாட்கள் கைக்கொள்ளும் விரதமாகும். இவ் விரதம் இவ்வருடம் 16.10.2010 சனிக்கிழமை ஆரம்பமாகி 05.11.2010 வெள்ளிக்கிழமை வரை அனுஷ்டிக்கப் பெறுகின்றது.

இவ் விரதத்தை அனுஷ்டிப்போர் சிவ-சக்தி அருளால் சகல சௌபாக்கியங்களும் பெற்று தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்து வீடுபேறடைவர் என புராணங்கள் கூறுகின்றன.
மணமாகிய பெண்கள் தங்கள் மாங்கல்யம் தொடர்ந்தும் மங்களமாக இருக்க வேண்டியும்,மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல மாங்கல்ய வாழ்வை (கணவனை) வேண்டியும் இந்த விரதத்தினை அனுஷ்டிக்கின்றனர். 

மங்களகரமான வாழ்க்கையை வேண்டி ஆண்களும் இந்த விரதத்தை அனுட்டிக்கின்றனர். விரதம் ஆரம்பமான நாளிலிருந்து இருபத்தொரு இழைகளைக் கொண்ட  நூலில் நாள்தோறும் ஒவ்வொரு முடிச்சுகளாக இடப்பட்டு, இறுதி நாளன்று அந்நூலை கோயில் குருக்களைக் கொண்டு  ஆண்கள் தமது வலது கையிலும், பெண்கள் தமது இடதுகையிலும் அணிந்து கொள்வர்.

சக்திரூபமான பார்வதி தேவி சிவனை நினைந்து விரதமிருந்து, வழிபட்டு அதன் பலனாக சிவபெருமானின் (இடது பக்க) பாதியுடம்பை பெற்று, அர்த்நாரியாகவும், அர்த்த நாரீசுவராகவும் ஒன்றாகி விரதமே கேதார கௌரி விரதமாகும்.
 
"கேதாரம்" என்பது இமயமலைச் சாரலில் உள்ள ஒரு சிவதலம். இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் சிவனை நினைத்து பார்வதி தேவியாகிய "கௌரி' இவ் விரதத்தினை மேற்கொண்டதால் இப் பெயர் உண்டாயிற்று. சிவனுக்கு சமமான நிலையில் சக்திஅமையும் போது அது பராசக்தி எனப்போற்றப்படுகின்றது.

தென்நாட்டுச் சைவம் எனப்போற்றப்படும் சைவ சித்தாந்தம் கூறும் பரம்பொருள் சிவனாகும். சிவனின் அருள் வேண்டி அனுஷ்டிக்கப்படும் விரதங்கள் பல இருந்த போதிலும் கேதார கௌரி விரதம் பலவகையிலும் சிறப்புடைய விரதமாகக் கொள்ளப்படுகின்றது. 

பக்தர்கள் இவ்விரதத்தினை மன ஒருமைப்பாட்டுடனும்புனித நோக்குடனும் என்ன வரம் வேண்டி அனுஷ்டிக்கிறார்களோ அந்தந்த வரங்களை அம்பாளின் வேண்டுகோளிற்கு இணங்க சிவன் மிக விரைவாகவே கொடுத்து விடுவார் என்பது பலரது அனுபவ உண்மையாகும்.
 
இதனை விட சர்வலோக மாதாவாகிய பார்வதி தேவியே இந்நோன்பினை முதன் முதலில் அனுஷ்டித்து பரம்பொருளின் இடது பாகத்தினைப் பெற்றுக் கொண்டார் என்பதும் இவ் விரதத்திற்கு வழங்கப்படும் அடுத்த சிறப்பாகும். 

ஆண், பெண் என்ற வேறுபாடோ, வயது வேறுபாடோ இன்றி, வாழ்க்கையின் எந் நிலையில் இருப்போரும் இவ் நோன்பினை தமக்கு வேண்டிய வரங்களை வேண்டி அனுஷ்டித்து இக, பர இன்பத்தினைப் பெற்று இன்புற்று வாழ வழி செய்கின்றது. இத்தகைய சிறப்பு பெற்ற "கேதார கௌரி விரதம்' பற்றி ஓர் புராண வரலாறு உண்டு.


விரதபலன்

 தம்பதிகள் சேமமாக இருத்தலும் பிணிநீங்கலும் வறுமை நீங்கி செல்வம் பெறுவதற்கும் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதற்கும் சிவனருளைப் பரிபூரணாகப் பெறுவதற்கும் உகந்தது. கணவனும் மனைவியும் கருத்தொருமித்து ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதே இவ்விரத்தின் அடிப்படைத் தத்துவமாகும்   
   

குழைத்த வெண்திசைப் புனல்படிந்து அரனடிகுறுகா
    

 இழைத்த தந்துவி னேழு மூனறிடக்கரந் தரித்துக்
    

 குழைத்த வெண்கதிர் பரிதிபோய்க் குரைககடற் குளிப்ப
    

 இழைத்த சிந்தையி னோர்பொழு தயின்றுற வேண்டும்”.  

Life

A beautiful Relationship Doesn’t depend On how Good We understand Someone, but it Depends on how Well we avoid Misunderstanding….

 Love the people who treat you right. Pray for the ones who don't!!

 I've nothing much 2 give u in this lovely world. But a lovely place in my heart where u vl b always safe and under my care till its last beat 

Sometimes I wish life was like my dreams. Perfect. Effortless. Everything going the way I want it to... Too bad I have to wake up...! :(

 Fear less, hope more, eat less, chew more, whine less, breathe more, talk less, say more, love more, and all good things will be yours!!

When you say you have no choice. Your wrong! There's always a choice...you're just afraid to choose it!

4 things tht cnt be recovered in life, the stone afta its thrown, the word aftr its said, the occasion dats missed, nd the time aftr its gone.. dnt waste ur life!!

உணரும் வரையில் உண்மையும் ஒரு பொய்தான். புரிகிற வரையில் வாழ்க்கையும் ஒரு புதிர்தான்..

அமைதியிலே இரண்டு வகை உண்டு. ஒன்று விவரம் தெரியாமல் இருக்கிற அமைதி. இன்னொன்று எல்லா விவரங்களையும் தெரிந்திருக்கும் அமைதி.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே, கோபத்தை வெளிபடுத்தும் முன் யோசிக்க மறந்து விடாதே!!!

 

Monday, October 25, 2010

My Heaven

சிந்திக்கச் சில...


வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள். 

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.

தன்னுடைய வாழ்நாளில் எவராவது தாம் ஒரு பிழையும் செய்ததில்லை என்று அவர்கள் நினைத்தால் தம் முயற்சிகளை புதிய வாழ்வில் செய்து பார்த்ததில்லை என்று பொருள்.

ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை வாக்கு சுற்றம் இதயம் இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள். ஏனெனில் அவைகளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும் பெரும் வலியை ஏற்படுத்தும்.

நன்மையைப் போலவே தீமையிலிருந்தும் மனிதன் பெரும் பாடங்களைக் கற்றுக்கொள்கிறான்.

பெர்னாட்ஷா - 1


பெர்னாட்ஷா - 1

செஸ்டர்டன் என்ற எழுத்தாளர் ஒருமுறை பெர்னாட்ஷாவை சந்திக்க வந்திருந்தார். 
ஷா மிகவும் ஒல்லியாக இருந்தார். செஸ்டர்டன் மிகவும் உடல் பருத்து குண்டாக இருந்தார். செஸ்டர்டன் பெர்னாட்ஷாவைப் பார்த்து "உங்களைப் பார்த்தால் இந்த நாட்டில் பஞ்சம் தலைவிரித்து ஆடுவது போல் இருக்கிறது" என்று கிண்டலாக சொன்னார்.
ஷா அதற்கு அமைதியாக "நீங்கள் சொல்வது உண்மைதான்  ஆனால் உங்களைப் பார்த்தால் "பஞ்சத்திற்குக் காரணமே நீங்கள்தான் என்று புரிந்து கொள்வார்கள்"என்றார்
செஸ்டர்டன் அதற்குப் பிறகு வாயே திறக்கவில்லை... :)


பெர்னாட்ஷா -2

பெர்னாட்ஷாவைப் பார்த்து அவருடைய நண்பர் ஒருவர்  'பெர்னாட்ஷா; திடீரென்று உங்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?'என்று கேட்டார். 
அதற்குப் பெர்னாட்ஷா... "கடவுளுக்கு நன்றி சொல்வேன்"என்றார்
குழப்பமடைந்த நண்பர் "கடவுளுக்கு நன்றியா ஏன்என்று கேட்டார். 
 "பைத்தியக்காரத்தனமான கேள்விகளைக் கேட்கும் உங்களைப் போன்றவர்கள் என்னை நெருங்கப் பயப்படுவார்கள் அல்லவா ? அதனால்தான்"என்றார் ஷா அமைதியாக.