VANAKKAM Silanthinaayagam WELCOMES u !!!

Friday, August 26, 2011

வாழத் தெரியாதவள்

என்னைப் பற்றிப் பேசினேன்,
சுயபுராணம் என்றனர்...

மற்றவர்களைப் பற்றிப் பேசினேன்,
பொறாமை என்றனர்...

சமூகத்தைப் பற்றிப் பேசினேன்,
பிழைக்கத் தெரியாதவள் என்றனர்...

சிரித்துப் பேசினேன், சூழ்ச்சிக்காரி என்றனர்..
சிரிக்காமல் பேசினேன், நயவஞ்சகி என்றனர்..

அமைதி காத்தேன், உம்மனாமூஞ்சி என்றனர்..
மௌனமானேன், 
வாழத் தெரியாதவள் என்றனர்....

No comments:

Post a Comment